செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?
வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.
அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?
மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.
Monday, May 11, 2009
Sunday, May 03, 2009
மனிதரை மதிப்பிட...
நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்
வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.
வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!
நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்
மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்
வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.
வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!
நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்
மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.
போலிகள்

வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும்
வண்டுசெயும் ரீங்காரம், மரங்கள் மீது
ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்,
ஓடைசெயும் சலசலப்பும் தென்ற லாக
வீசுகின்ற மென்காற்றில் மிதந்து காதில்
விழும்படியாய் இயற்கையவள் அருகே வந்து
பேசுகின்ற ரகசியங்கள் நகர வாழ்வின்
பேரிழப்பு இவையெதுவும் கிட்டா திங்கு!
அரைச்சுவரில் பசுமையுடன் புற்ப ரப்பு,
அழகான தென்னைமரம், ஆட்டுக் குட்டி,
விரைந்தோடும் நீரோடை, மேசை மீது
விரிப்பினிலே பூச்செடிகள், ஜன்னல் மூடும்
திரைத்துணியில் வான் நிலவு பறவைக் கூட்டம்
திகட்டாத இயற்கைதரும் காட்சி யின்பம்
வரைந்தவெறும் போலிகளில் மட்டும் கண்டு
வாழுகின்ற வாழ்க்கையிது நரகந் தானே!
கலைச்சுரங்கம் ஜனவரி 1997
Saturday, May 02, 2009
கடல் அலையே!

காலை இரவெனப் பாராது - இங்கு
கரைவரை வந்துபின் செல்லுகிறாய்
நீலநி றப்பெருங் கடலலையே!
நீயதன் காரணம் கூறுவையோ?ஆழ்கடல் எல்லையைக் காத்திடலோ? - அன்றி
அடுத்த நிலந்தனில் முற்றுகையோ?
பாழ்நில மாந்தரைப் போல் முழங்கிப் - போர்ப்
பகைவெறி வுண்டெனக் காட்டுதியோ?
பாலர்கள் காலடி மண்நழுவ - அவர்
பாதம் நனைத்துநீ செல்லுகையில்
கோலமு கங்களில் நகைமலரும் - அந்தக்
கொள்ளை அழகினைக் காண்பதற்கோ?
ஆழ்கடற் செல்வங்கள் அத்தனையும் - வாரி
அள்ளிச் சென்றபெரும் பாதகரை
சூழ்கரை எங்கணும் தேடுதியோ? - நீ
சொல்லிடு வாயிங்கு சற்றுநின்றே!
மதுரைத் தென்றல் வீதியுலா:எட்டு. ஜூன் 2000
Tuesday, March 24, 2009
குறள் நெறிகள்
குத்தி வெட்டியும் குடைந்து தோண்டியும் குதறி மேனியில் குழிகள் செய்திடும்
பித்த மானிடர் நிற்கை தாங்கிடும்
பெற்றி கொண்டதிப் பூமியல்லவோ?
புத்தி யின்றியே புல்லர் தருமிடர்
பொறுமை கொண்டுநாம் புறக்க ணிப்பதை
ஒத்த நன்னெறி ஒன்று வேறிலை
உயர் குறளுரை உணர வேண்டுமே!
தெருவி லெச்சிலைத் தேடி யோடியே
தின்று வாழ்ந்திடும் நாயினும் நம்
அறிவு நன்றியிற் குறைவு தானெனில்
அதனை யேற்கவே வேண்டு மல்லவோ?
வுருவி லழக்கெமக் குள்ள தென்பதால்
வுய்வு வேண்டுத லில்லை யென்பமோ?
பரிவு கொண்டதால் வள்ளுவன் இதைப்
பாருளோர்க் கெலாம் பகர்ந்து போயினான்.
என்ன பயனிதாற் கிடைக்கு மென்றுநாம்
எண்ணிச் செய்கிற காரி யங்களில்
தன்னை வளர்ப்பதோர் நோக்க மொன்றினால்
தாழ்ந்து போனவ ராவ தில்லையோ?
மண்ணில் தோன்றிய மரங்க ளொப்பவும்
மழை பொழிந்திடு மேக மொப்பவும்
உண்ணு நீர்தரு நிலைக ளொப்பவும்
உலக மானிடர் வாழ வேண்டுமே!
பள்ளம் நோக்கியே பாயு நீரென
பற்றினால் மனம் தீய நாடிடும்
தள்ள வேண்டிய பொருளனைத் தையும்
தான டைந்திடத் துன்பமே தரும்.
உள்ளம் செல்வழித் தீமை நீக்கியோர்
உண்மை நன்மைபால் உய்ப்ப தறிவுதான்
வள்ளு வன்குறள் தவிர வேறுநூல்
வாழு நெறிகளைக் கூறி மிஞ்சுமோ?
'கவிதை' மாத இதழ் மே 1986
Wednesday, March 18, 2009
விடுதி
நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.
'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.
'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?
சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.
'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.
'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?
சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?
Monday, January 26, 2009
வாழ்க்கை ஒரு விளையாட்டு
பாரிதனைப் படைத்ததுநற் பரம்பொருளின் விளையாட்டு
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.
தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்
எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.
தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்
வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!
(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)
காரிருளும் நண்பகலும் கடுங்கோடை வசந்தமெலாம்
காலத்தின் விளையாட்டு. கருவுயிர்த்துப் பிறந்திட்டால்
ஞாலத்தில் வாழ்வதுமோர் நலமிக்க விளையாட்டே.
தாலாட்டு விளையாட்டு; தவழ்ந்திடுதல் விளையாட்டு;
பாலூட்டல் மாறியபின் பலபொம்மை விளையாட்டு;
சிற்றில் இழைத்திடுதல்; சிறுதே ருருட்டிவரல்;
பெற்றோர் மகிழ்ந்திடவே பேரோசைப் பறைகொட்டல்
எல்லாம் விளையாட்டு. ஏடெடுத்துக் கற்கையிலே
கல்வியொரு விளையாட்டு; காளையென வளருகையில்
காதலுமே விளையாட்டு; காரிகையைக் கைப்பிடிக்கச்
சோதனைகள் வென்றிடுதல் சோர்வில்லா விளையாட்டு.
தானொன்று தாயென்றும் தந்தைநான் எனவொன்றாய்ச்
சேயிரண்டின் விளையாட்டைச் சேருவது இல்வாழ்க்கை.
மித்திரராய், சத்துருவாய், மேலும்பல வேடமிட்டு,
இத்தரையில் நாடகங்கள் எத்தனையோ ஆடியபின்
வெற்றியிலே தோற்றுப் பிறர்வேதனையில் மகிழ்வுற்றுக்
கற்றதென ஒன்றின்றிக் காலத்தால் வுடல் தளர,
முடிக்கின்ற ஆட்டத்தே முதல்வனவன் விதித்தவழி
மடிதலென்றால் களைப்பாறல் மறுபடியும் ஆடிடவே!
(விளையாட்டுக் களஞ்சியம். மே 1983)
புதிய பட்டாசுகள்
இன்சாட் விட்டது அதிர்வேட்டு - அது
இல்லை யென்றானது புஸ்வானம்.
மின்வெட் டென்பது சரக்கட்டு - விலை
மேலே போகும் ராக்கெட்டு.
மின்னல் போலே ஒளிசிதறி - பின்
மேகம் போலதிற் புகை மூடும்
அன்னவை அரசியல் முழக்கங்கள் - அவை
அழகாய் எரியும் மத்தாப்பு.
ஆனை வெடியெனச் சொல்லுதற்கும் - ஒரு
ஆசிய விளையாட் டுண்டிங்கு.
போன வருடம் இல்லாத - பல
புதுவெடி கண்டோம் போதுமடா.
(முல்லைச்சரம். ஜனவரி 1983)
இல்லை யென்றானது புஸ்வானம்.
மின்வெட் டென்பது சரக்கட்டு - விலை
மேலே போகும் ராக்கெட்டு.
மின்னல் போலே ஒளிசிதறி - பின்
மேகம் போலதிற் புகை மூடும்
அன்னவை அரசியல் முழக்கங்கள் - அவை
அழகாய் எரியும் மத்தாப்பு.
ஆனை வெடியெனச் சொல்லுதற்கும் - ஒரு
ஆசிய விளையாட் டுண்டிங்கு.
போன வருடம் இல்லாத - பல
புதுவெடி கண்டோம் போதுமடா.
(முல்லைச்சரம். ஜனவரி 1983)
Sunday, January 25, 2009
முழு நிலவு
அதியுணவு கொண்டதனால் அவதி யுற்று
அன்றொருநாள் மேன்மாடத் தமர்ந்தி ருந்தேன்.
அதிகாலை செய்வதற்கு வேலை யுண்டு
அசதியினில் வுடல்சாய்த்தேன் உறக்கம் கொள்ள.
அதியழகி மதியரசி ஆடு கின்ற
அரங்கமென விண்வெளியை ஆக்கி வைத்து,
பதியிதனைப் பார்க்கிறவர் கூட மாக்கிப்
பார்த்திட்டேன் மனத்திரையில் நாட்டியத்தை.
ஆடிநின்ற அவள்தலையில் அணிந்திருந்த
அழகான மல்லிகைப்பூச் சரமும் ஆடி
மேடையிலே விரித்துவைத்த நீலப் பட்டில்
மின்னுகின்ற வெண்பூக்கள் வுதிர்த்த காட்சி
ஒடுகின்ற நதிநீரில் துரும்பு போல
ஒருநொடியில் மறைந்துவிடும் காட்சியாகி,
கோடிக்கைச் சூரியனால் கலைந்து போக
கோபத்தில் விழித்தபோது காலை நேரம்.
மண்ணரங்கில் நாட்டியங்கள் முடிந்த பின்பு
மனிவிளக்குத் தோரணங்கள் யாவும் நீங்கி
எண்ணிறந்த இனியகாட்சி இல்லை யாகி
ஏளனத்து வெற்றிடமாய் மாறிப் போகும்.
விண்ணரங்கில் மதியரசி ஆட்டம் கூட
விலக்கில்லை இதற்கென்றால் என்ன செய்ய?
கண்ணிரண்டும் திங்களொன்று காத்திருந்து
காட்சியிதை மறுபடியும் காண வேண்டும்.
(அமுதசுரபி. டிசம்பர் 1980)
அன்றொருநாள் மேன்மாடத் தமர்ந்தி ருந்தேன்.
அதிகாலை செய்வதற்கு வேலை யுண்டு
அசதியினில் வுடல்சாய்த்தேன் உறக்கம் கொள்ள.
அதியழகி மதியரசி ஆடு கின்ற
அரங்கமென விண்வெளியை ஆக்கி வைத்து,
பதியிதனைப் பார்க்கிறவர் கூட மாக்கிப்
பார்த்திட்டேன் மனத்திரையில் நாட்டியத்தை.
ஆடிநின்ற அவள்தலையில் அணிந்திருந்த
அழகான மல்லிகைப்பூச் சரமும் ஆடி
மேடையிலே விரித்துவைத்த நீலப் பட்டில்
மின்னுகின்ற வெண்பூக்கள் வுதிர்த்த காட்சி
ஒடுகின்ற நதிநீரில் துரும்பு போல
ஒருநொடியில் மறைந்துவிடும் காட்சியாகி,
கோடிக்கைச் சூரியனால் கலைந்து போக
கோபத்தில் விழித்தபோது காலை நேரம்.
மண்ணரங்கில் நாட்டியங்கள் முடிந்த பின்பு
மனிவிளக்குத் தோரணங்கள் யாவும் நீங்கி
எண்ணிறந்த இனியகாட்சி இல்லை யாகி
ஏளனத்து வெற்றிடமாய் மாறிப் போகும்.
விண்ணரங்கில் மதியரசி ஆட்டம் கூட
விலக்கில்லை இதற்கென்றால் என்ன செய்ய?
கண்ணிரண்டும் திங்களொன்று காத்திருந்து
காட்சியிதை மறுபடியும் காண வேண்டும்.
(அமுதசுரபி. டிசம்பர் 1980)
காலைப் பொழுது
இளம்பரிதி முளைத்தெழவும்
இருளகன்று ஓடிவிடும். - குப்பைச்
சேவலது கூவலோடு
செகத்தினிலே நாள் பிறக்கும்.
வாசலிலே தூசகலும்;
வாளிமழை நீர்பொழியும்; - பெண்கள்
விரல்வழிவெண் பொடிவழிய
வீதியிலே பூமலரும்.
தினத்தாள் பறந்துவரும்;
தெருவோரம் மலம்சேரும். - நடுவீதிப்
பால்வண்டி ஒலிகேட்கப்
பாத்திரங்கள் காத்திருக்கும்.
ஆற்றின் கரைநிறையும்;
அழுக்காடை பாட்டிசைக்கும்; - பலரும்
தலையமிழ்த்தி நீராடத்
தண்ணீரே தாளமிடும்.
இல்லாளின் முனுமுனுப்பின்,
இனியமகன் தேவைகளின் - பின்னே
நாள்முழுதும் செய்வதற்கு
நம்கடமை காத்திருக்கும்.
(ஜன்னல். நவம்பர் 1977.)
இருளகன்று ஓடிவிடும். - குப்பைச்
சேவலது கூவலோடு
செகத்தினிலே நாள் பிறக்கும்.
வாசலிலே தூசகலும்;
வாளிமழை நீர்பொழியும்; - பெண்கள்
விரல்வழிவெண் பொடிவழிய
வீதியிலே பூமலரும்.
தினத்தாள் பறந்துவரும்;
தெருவோரம் மலம்சேரும். - நடுவீதிப்
பால்வண்டி ஒலிகேட்கப்
பாத்திரங்கள் காத்திருக்கும்.
ஆற்றின் கரைநிறையும்;
அழுக்காடை பாட்டிசைக்கும்; - பலரும்
தலையமிழ்த்தி நீராடத்
தண்ணீரே தாளமிடும்.
இல்லாளின் முனுமுனுப்பின்,
இனியமகன் தேவைகளின் - பின்னே
நாள்முழுதும் செய்வதற்கு
நம்கடமை காத்திருக்கும்.
(ஜன்னல். நவம்பர் 1977.)
Friday, January 23, 2009
புதிய சுவர்
கொச்சைத்தமிழ் மொழிதனிலே விளம்ப ரங்கள்
கொலைசெய்யும் தரந்தாழ்ந்து தமிழ்தான் சாகும்.
'இச்சுவரில் ஒட்டாதீர் நோட்டீஸ்' ஸென்று
எச்சரிக்கை செய்திருக்கும் அதையும் மீறி
மிச்சயிடம் எதுவுமின்றி ஏணி யேறி
மேற்சுவரில் ஒட்டிவிடும் காகி தங்கள்
பச்சைசிவப் பென்றுபல நிறமுங் காட்டிப்
பரிதாப மாய்க்கிழிந்து பாதி தொங்கும்.
தாடிமயிர் வளர்வதற்குத் தைலம்; மேலும்
தலைமயிரின் நரை மறைக்கச் சாயம்; மற்றும்
கோடிவகைக் கட்சிகளின் மீட்டிங்; நாளும்
கொள்கைகளை விளக்குகின்ற கூட்ட நோட்டீஸ்;
பீடிபொடி சோப்வகைகள் பெயர்கள்; நாட்டில்
பகுத்தறிவுப் பெரியவர்கள் வுதிர்த்த சொற்கள்
வேடிக்கை இவையெல்லாம் இல்லை இங்கே
விரைந்திதனைக் காண்பதற்கு வாரீ ரின்றே!
(முல்லைச்சரம். பிப் 1975)
எங்கள் கிராமம்
ஓலையில் வேய்ந்த குடிசையுண்டு நல்ல
ஓடையுண்டு சிறு சோலையுண்டு - அதி
காலையிலும் கூடக் காதவழி செல்லக்
காளைகள் பூட்டிய வண்டியுண்டு.
மாட்டிய கழுத்து மணியொலிக்க -
நல்ல
மாடுகள் வண்டியை இழுத்து வர
ஓட்டி வருகிற சாரதி செய்கிற
ஓரொரு சீழ்கை ஒலி கேட்கும்.
வீடுகள் முன்னர் நீர் தெளித்து - நல்ல
வெள்ளைப் பொடி வைத்துக் கோடிழுத்து
பாடிய வாயுடன் பற்பல பென்டிர்கள்
பக்குவமாய் இடும் கோலமுண்டு.
கூடிய நெற்பயிர் தோள்சு மந்து - அவர்
கொண்டு வந்து நல்ல பொங்கல் வைத்து
தேடி வருகிற விருந்தினர் யாவரும்
தினறும் வகையினில் உண்ண வைப்பார்
ஆலயக் கோபுரம் அருகிற் சிறுகுளம்
அரசம ரத்தடிப் பிள்ளை யாரும்
மாலையில் ஓர்முறை யாவது வாவென
மக்களை யழைக்கும் பூவ னமும்
வருகின்ற தென்றலின் இனிமையுடன் - அங்கு
வளர்கின்ற தென்னையின் இள நீரும்
தருகின்ற சுவையினிற் கால மெல்லாம் - அங்கு
தனியாய்க் கழித்திடத் தோன்று மம்மா.
(முல்லைச்சரம். நவம்பர் 1974)
மலர்ச் சிரிப்பு
என்னிடத்தே பொய்வேண்டாம்
எழில்சேர் மல்லிகையே
உன்னிதழிற் புன்னகையேன்
ஒளியா துரைப்பாயே!
அரைநாளில் வதங்கிவாடி
அழியப்போம் உன்னைப்போய்
தரைமாதர் தலயேற்றித்
தாங்குவதை நினைத்தாயோ?
தத்துவங்கள் அறியாய்நீ
தருமதுவை வுண்டிங்கு
சுத்துகின்ற சுரும்புகளின்
சுவைப்பேச்சுக் கேட்டனையோ?
தென்றலது தூண்டுதலால்
தெளிவாகப் பதில்மறுக்கும்
உன்றனது தலையசைப்பால்
உணர்த்துவது தானென்ன?
(அமுதசுரபி தீபாவளி மலர் 1973)
எழில்சேர் மல்லிகையே
உன்னிதழிற் புன்னகையேன்
ஒளியா துரைப்பாயே!
அரைநாளில் வதங்கிவாடி
அழியப்போம் உன்னைப்போய்
தரைமாதர் தலயேற்றித்
தாங்குவதை நினைத்தாயோ?
தத்துவங்கள் அறியாய்நீ
தருமதுவை வுண்டிங்கு
சுத்துகின்ற சுரும்புகளின்
சுவைப்பேச்சுக் கேட்டனையோ?
தென்றலது தூண்டுதலால்
தெளிவாகப் பதில்மறுக்கும்
உன்றனது தலையசைப்பால்
உணர்த்துவது தானென்ன?
(அமுதசுரபி தீபாவளி மலர் 1973)
Friday, January 16, 2009
விநாயகர் துதி
வெற்றிபெறப் பெற்றோரை வேலன் வருமுன்னம்
சுற்றியபொற் பாதம் சுகந்தருமே - பற்றியவர்
வுற்ற துயர்போகும் வூழ்வினையும் போயொழியும்
கற்பக மூர்த்தியே காப்பு.
சுற்றியபொற் பாதம் சுகந்தருமே - பற்றியவர்
வுற்ற துயர்போகும் வூழ்வினையும் போயொழியும்
கற்பக மூர்த்தியே காப்பு.
Thursday, January 01, 2009
தமிழ்த் தாய் அருள்வேட்டல்
நின்றன் கருணை நினைந்துருகிப் பாமலரால்
என்றும் துதிக்கும் எனக்கருள்வாய் - இன்றமிழே!
சொன்னயமும் சந்தச் சுவையழகும் சொட்டிடநீ
என்றுமென் பாட்டில் இரு.
Subscribe to:
Posts (Atom)