Friday, January 23, 2009

மலர்ச் சிரிப்பு

என்னிடத்தே பொய்வேண்டாம்
எழில்சேர் மல்லிகையே
உன்னிதழிற் புன்னகையேன்
ஒளியா துரைப்பாயே!

அரைநாளில் வதங்கிவாடி
அழியப்போம் உன்னைப்போய்
தரைமாதர் தலயேற்றித்
தாங்குவதை நினைத்தாயோ?

தத்துவங்கள் அறியாய்நீ
தருமதுவை வுண்டிங்கு
சுத்துகின்ற சுரும்புகளின்
சுவைப்பேச்சுக் கேட்டனையோ?

தென்றலது தூண்டுதலால்
தெளிவாகப் பதில்மறுக்கும்
உன்றனது தலையசைப்பால்
உணர்த்துவது தானென்ன?

(அமுதசுரபி தீபாவளி மலர் 1973)

No comments: