Monday, December 28, 2020

புலியென்றும் தின்னுமோ புல்

 


வலிந்துசெயல் கொள்ள வழங்குகிற லஞ்சம்

நலிந்திருந்தும் நாடாதார் நல்லோர் – மலிந்து

கலிநின்றே ஆடுமிக் காலத்தும் உண்டு.

புலியென்றும் தின்னுமோ புல்?


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  29.4.2019

Sunday, December 27, 2020

புகழென்னும் போதைப் பொருள்

 


தலைக்கர்வம் ஏற்றும். தகவற்றார் தாமே

விலைக்குப் பெறுவிருதை வேண்டும். – அலைதல்

இகழ்வென்றும் எண்ணா திரக்கவும் தூண்டும்.

புகழென்னும் போதைப் பொருள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. Minnithazh.   22.4.2019

Monday, December 14, 2020

கல்வி யழகே அழகு.

 

கற்றவரிற் பொய்யர் கயவரொடு வீணரிவர்

பெற்றபொருட் பேரழகைப் பேசுவதோ? – கற்றதெது?

நல்ல நெறியறிந்து நிற்கை பிறழாதார்

கல்வி யழகே அழகு.

 

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com Minnithazh  8.4.2019

Friday, December 04, 2020

மானம் அழுங்க வரின்

 

 

மானம் வருமானம் மண்ணில் இவையிரண்டில்

மானம் பெரிதாய் மதித்திடுவார் – மேனிலையர்

காணப் பலகோடி கைவரினும் வேண்டார்தம்

மானம் அழுங்க வரின்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz  1.4.2019