ஈற்றடி; பாரதம் ஓங்கிடவே பாடு
பெற்ற புகழும் பெருவளமும் பண்பாடும்
உற்ற படியுரைக்க உள்ளாரார் --- மற்றதெது
நேரிதற் கில்லையதை நீயெழுது நம்நாடு
பாரதம் ஓங்கிடவே பாடு
ஈற்றடி; பாரதம் ஓங்கிடவே பாடு
பெற்ற புகழும் பெருவளமும் பண்பாடும்
உற்ற படியுரைக்க உள்ளாரார் --- மற்றதெது
நேரிதற் கில்லையதை நீயெழுது நம்நாடு
பாரதம் ஓங்கிடவே பாடு
ஈற்றடி; இளமையில் காதல் இனிது
உண்ணுமுண
வுக்கும் உடுக்கும் உடைக்குமே
எண்ணிச்
செலவழித்தே ஏங்குபவர் --- எண்ணார்
வளமையொடு
சுற்றமும் வாய்க்குமெனில் யார்க்கும்
இளமையில்
காதல் இனிது.
செயலாற்றச்
சோம்பிச் சிலநல்ல வற்றை
முயன்றுகை
விட்டதுண்டு முன்பு – இயலாதாய்
எத்தாலும்
ஆகா தெனநின் றவைமுடித்துப்
புத்தாண்டில்
காண்போம் பொலிவு.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.