Sunday, June 20, 2021

திருஉறை மார்ப!

 


பொருளே பெரிதாய்ப் புரிபா வமுடன்

   புலனின் பநுகர் வதிலார் வமுளன்

அருளிச் செயலை வடவே தமதை

   அறவே அறியா துளகீழ் நிலையன்

 

மனதா லுரையா லுளதே கமதால்

   மதிமீ றியகா ரியமே புரியும்

எனதா யிரமா யிரமா னபிழை

   எதுவா யினுமே இலையா யருள்வாய்

 

ஒருசக் கரமும் ஒலிசங் கதுவும்

   உடையாய்! அழகே உருவா னவனே!

திருவே தனதாய் உறைமார் பினனே!

   தொழுதேன் அடிசேர் கதிதந் தருளே!