Friday, January 23, 2009

புதிய சுவர்











கொச்சைத்தமிழ் மொழிதனிலே விளம்ப ரங்கள்
கொலைசெய்யும் தரந்தாழ்ந்து தமிழ்தான் சாகும்.
'இச்சுவரில் ஒட்டாதீர் நோட்டீஸ்' ஸென்று
எச்சரிக்கை செய்திருக்கும் அதையும் மீறி
மிச்சயிடம் எதுவுமின்றி ஏணி யேறி
மேற்சுவரில் ஒட்டிவிடும் காகி தங்கள்
பச்சைசிவப் பென்றுபல நிறமுங் காட்டிப்
பரிதாப மாய்க்கிழிந்து பாதி தொங்கும்.

தாடிமயிர் வளர்வதற்குத் தைலம்; மேலும்
தலைமயிரின் நரை மறைக்கச் சாயம்; மற்றும்
கோடிவகைக் கட்சிகளின் மீட்டிங்; நாளும்
கொள்கைகளை விளக்குகின்ற கூட்ட நோட்டீஸ்;
பீடிபொடி சோப்வகைகள் பெயர்கள்; நாட்டில்
பகுத்தறிவுப் பெரியவர்கள் வுதிர்த்த சொற்கள்
வேடிக்கை இவையெல்லாம் இல்லை இங்கே
விரைந்திதனைக் காண்பதற்கு வாரீ ரின்றே!

(முல்லைச்சரம். பிப் 1975)

No comments: