Monday, August 01, 2011

பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ



கற்ற பொருளனைத்தும் காமுற்றார் கேட்டறிய
உற்ற வகையுரைக்க வொண்ணாதார் - கற்றையாய்ப்
பாத்திரத்தில் மேடையில் பார்வைக்கு வைத்திருக்கும்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009.

நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!


பிஞ்சுக் கரங்கொண்டு பின்னொளித்த வெண்ணையுடன்
அஞ்சி அழுங்கண்ணா! அன்னைமுன் - கெஞ்சுகிற
கொஞ்சும் விழியழகைக் கொண்டு மயக்கியென்
நெஞ்சில் நிறைந்ததென்ன நீ!

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
- தமிழரின் மனித நேயம்- ஜுலை 2009