Friday, April 30, 2021

நிழலும் மிதிக்கும் நிலை

 

உன்னதம் போய்மறையும் உற்றதுணை விட்டகலும்

பின்னடைவு கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி

அழலே விதியென் றடங்கவும் வைக்கும்

நிழலும் மிதிக்கும் நிலை.


ஈற்றடிக்கு எழுதியது.    Tamilauthors.com. Minnithazh 20.5.2019

Tuesday, April 20, 2021

எங்கும் நிறைந்தவன் தான்! (வினாவிடை)

 


 

வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை

    வானில் வரைந்தவர் யார்?

மண்ணி லதன்நிழல் நீரில் விழும்படி

    மண்புறச் செய்தது யார்?

 

\கண்ணைக் கவர்கிற காட்சிகள் யாவிலும்

    காணென நிற்பவன் தான்.

எண்ணத் துறைபவன் எழில்வடி வானவன்

    எங்கும் நிறைந்தவன் தான்.

 

 

மின்னிதழ் ஒன்றின் படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.

10.9.2018.

Thursday, April 01, 2021

எக்காலத் தானும் இனிது



பொய்யாயாள் சேர்த்தல், பொருள்தருதல், சாவடிக்குள்
கையாள் எனவிவற்றால் காண்வெற்றி – மெய்யாமோ?
தக்கார் எனமக்கள் தாமே தரும்வெற்றி
எக்காலத் தானும் இனிது.

ஈற்றடிக்கு எழுதியது. tamil authors.com 25.3.2019