Friday, October 28, 2016

காதலெனும் பூந்தென்றற் காற்று


சோதனையாய் மாறிச்
சுற்றமெலாம் கைவிட்டு
ஆதரவைத் தேடுநிலை
ஆகிடுமேல் - மோதலொடு
வேதனையைத் தான் நல்கும்
வீசும் புயலாகும்
காதலெனும் பூந்தென்றற் காற்று. 

Tuesday, October 25, 2016

பற்றினால்....

பற்றினால் உறவு சேரும்.
   பகையுமே பெருகெ லாகும்.
பற்றினால் ஒழுக்க வாழ்வு,
   பண்புகள் மாறிப் போகும்.
பற்றினால் உடைமை சேரப்
   பற்றுதான் மீண்டும் பற்றும்.
பற்றினை ஒழித்த பின்னர்
   பாரினில் துன்ப மில்லை.


உடல்நலம் மிக்க வாழ்க்கை,
   உறவினர், மனைவி, மக்கள்,
கடலெனப்  பெரிய தான
   கட்டிடம், கார்கள், மாடு,
படர்கொடி மலரின் சோலை,
   பரந்துள வயல் நிலங்கள்
இடர்பல நல்கு கின்ற,
   இவைகளைத் தேடு கின்றோம்.


பொருள்களை உடைமை யாகப்
   பெருதலில் ஆசை யுற்று,
பொருள்களை அடையு தற்காய்ப்
   புரிகிற சாக சங்கள்
பொருள்களைத் தருவ தில்லை.
   பொருள்வழித் துன்பம் சேரப்
பொருள்நமை உடைமை கொண்டு
   போவதை உணரு வோமோ?