மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
வாட்டமுடன் நிற்கும் வழியைப் பலகாலும்
நோட்டமிடும் வாரி வசைபொழியும் --- மாட்டிய
பூட்டு வரவேற்கும் போது வருந்துமே
வீட்டுக்கு வந்த விருந்து.
அமுதசுரபி அக்டோபர் 2022 இதழில்,ஈற்றடிக்கு எழுதியது. இரண்டாம் பரிசு பெற்றது.
வெள்ளைக் கலையோடு வேணியும் வெண்ணீறும்
உள்ளவுரு உள்ளத் துளதாகத் --- தெள்ளியதாய்
விள்ளரிய வேத விழுப்பொருளைத் தந்ததிரு
வள்ளுவரை வாழ்த்தி வணங்கு.
ஈற்றடிக்கு எழுதியது