Saturday, November 27, 2021

பெரியராய்க் கொள்வது கோள்

 


கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்

யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்

அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து

பெரியராய்க் கொள்வது கோள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019

புகழ்தலின் வைதலே நன்று

 

 

வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்

பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்

நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.

புகழ்தலின் வைதலே நன்று.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019