Wednesday, June 28, 2017

உறவுக்குள் ஒற்றுமையைக் காண்



நிறைகளையே தேடிமுன்
நெஞ்சில் பதிந்த
குறைமறந்து நேசிக்கக் கற்று
- முறையாய்ப்
பிறரை நடத்திப்
பெரியோரைப் பேணி
உறவுக்குள் ஒற்றுமையைக் காண்.


ஈற்றடிக்கு எழுதியது. வெண்பா விருந்து- 7. உரத்த சிந்தனை ஜனவரி 2013.