Wednesday, January 22, 2020

வானுயர ஓங்கும் வளம்


வானம் பொழிமழையை வாங்கி நிலஈரம்
பேணும் வழிதன்னைப் பின்பற்றில் – காணுகிற
ஈனநிலை மாறி இயற்கையெழில் கொஞ்சிடவே
வானுயர ஓங்கும் வளம்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 19.11.2018  

Wednesday, January 08, 2020

என்சொல்லும் என் நா இனி



'சொன்னபொய் வெல்வதனாற் சொன்னோன் திறமையுளோன்
இந்நாளில் மெய்யுரைப்போன் ஏமாளி. – சொன்னதிதை
இன்றுமுதல் கைக்கொள்வாய்' என்கின்றார். மெய்பொய்யில்
என்சொல்லு மென்நா இனி

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 12.11.2018

Tuesday, January 07, 2020

சொல்லில் வடித்த சுடர்



அறிவிலொளி சேர்க்கும் அருங்குறளும் கொள்கைச்
செறிவு படைத்த சிலம்பும் – அறிஞரெலாம்
கல்விக் கிவனென்ற கம்பனவன் காவியமும்
சொல்லில் வடித்த சுடர்.

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  5.11.2018

Wednesday, January 01, 2020

விழியிலார்க் கேது விளக்கு



பாசமி லார்க்கில்லை பற்றுறவு. நெஞ்சத்து
நேசம் மறந்தார்க்கு நட்பில்லை. - பேசும்
வழியிலார்க் கேனோ ஒலிபெருக்கி. பார்க்கும்
விழியிலார்க் கேது விளக்கு.
ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com minnithaz.  29.10.2018.