செயலாற்றச்
சோம்பிச் சிலநல்ல வற்றை
முயன்றுகை
விட்டதுண்டு முன்பு – இயலாதாய்
எத்தாலும்
ஆகா தெனநின் றவைமுடித்துப்
புத்தாண்டில்
காண்போம் பொலிவு.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.
மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
செயலாற்றச்
சோம்பிச் சிலநல்ல வற்றை
முயன்றுகை
விட்டதுண்டு முன்பு – இயலாதாய்
எத்தாலும்
ஆகா தெனநின் றவைமுடித்துப்
புத்தாண்டில்
காண்போம் பொலிவு.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.
வேலைசெயும் சிக்னல் விளக்குப்போல் வாழ்விலுமே
துன்பம் தவிர்த்திடத்
தோன்றும் அடையாளம்.
நின்று
செயல்படலே நன்று
கவிஞர்கள் கலைக்கூடம் முகநூல் குழுமத்தில் தேர்வு பெற்றது.
பொய்யால் புரட்டால் புறப்பேச்சால் புன்சொல்லால்
மெய்யாய் உளதெதுவும் மாறாதே --- செய்வானேன்?
நோகாக்க, சொல்லழுக்கால் நாக்கழுக, வேண்டுவதா?
நாகாக்க என்றும் நயந்து.
விட்டு வெற்றியைப் பெற்றவர் யாருளர்?
நடைபெறும் எனநீ நம்புவை
ஆயின்
தடைகளுக் கிடையிலும் விடைபல காண்பை.
முற்றவும் முயன்று முடிகிற வரையில்
பற்றித் தொடர்ந்திடில் தொட்டிடு தூரம்.
வெற்றியுன் வசமாய் விரைவினில் ஆகுமே.
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா. முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை-
காட்சிப் படத்துக்கு எழுதியது. 10.2,2025.
இருபக்கம்
கர்ணம் இவைமீ தெழுதப்
பெறுசதுரம்
மூன்றில், பரப்பில் --- பெரிது,
தவறின்றி முன்னிரண்டும்
தாம்சேர்ந்த தாகும்.
கவனி இதுவே
கணக்கு.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மார்ச். 2022
ஒரு செங்கோண முக்கோணத்தில், கர்ணத்தின் மீது வரைந்த சதுரத்தின் பரப்பு, மற்ற இரண்டு பக்கங்களின் மீது வரைந்த சதுரங்களின் மொத்தப் பரப்புக்குச் சமம்.
வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்
இயலாத தாவ தியல்பே --- முயன்றே
அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து
வருங்காலத் திற்கென்று வை.
ஈற்றடிக்கு
எழுதியது. Tamilauthors.com ஆக. 2021
காசில்லை கையினில் கஞ்சி குடிக்கவழி
யோசிக்க வேண்டி
யிருப்பவர். --- பேசிடிலோ
பாயாக வான்சுருட்டிப்
பைக்குள் திணித்திடுவார்
வாயாற் சுடுவார்
வடை.
ஈற்றடிக்கு
எழுதியது. Tamilauthors.com ஜுன் 2021
கஞ்சத்தாள் கேள்வன்
கழலிணையைப் பக்தியுடன்
தஞ்சமெனப் பற்றியவர்
தம்முளத்தே – மஞ்சமென
நஞ்சரவிற் கண்வளரும்
நாரணனே வந்துறைவன்
நெஞ்சகமே கோவில்
நினை.
கஞ்சத்தாள்:
தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020
செந்தமிழில் ஏது சிறப்பென்று கேட்பாரேல்
வெந்தழியும் வீணர்நா வேறெதையும் நம்பாதே
செம்பொருள்சேர் வள்ளுவத்தைச் சிந்தா மணிநயத்தைக்
கம்பன் கவியழகைக் காண்.
அன்னையென நின்றே அருள்புரிவாள் தானொரு
கன்னியெனத் தோற்றம் கவிதைகளிற் காட்டுவதை
எண்ணிக் களிக்கின்றேன் யான்
படித்துச் சுவைக்கப் பலப்பலவாய் நூல்கள்
வடித்துப் புகழ்வளர வாழ்தல் --- பிடித்த
தமிழாலே என்றால் தரமாமோ? நன்று
தமிழ்வாழத் தான்வாழ்தல் தான்
முன்னை இழப்பினின்று மீளாத் துயருறல்
தன்னில் பிறருயர்வைத் தாங்காமை –-- நன்னெறிகள்
சீலம் நயவார்க்குச் சொல்லுதல் இம்மூன்றும்
கால விரயமே காண்.
பொறுமையுடன் நம்பிக்கை போற்றி யிருத்தல்
வருபயனைக் காணும் வழியாம் – ஒருவர்
அடைகாத்த லாற்றாதே ஓடுடைத்துக் குஞ்சை
யுடைத்தாராய் யாரிங் குளர்?
(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math,
Hyderabad.)
முயற்சி கவனம் முறையான திட்டம்
அயர்ச்சி யிலாதுழைக்கு மார்வம் – பயிற்சி
தனமுமுள தாயின் தவறாது வெற்றிக்
கனவு நனவாகும் காண்.
பொறாமை யகம்பாவம் பேராசை மூன்று
மிராத மனமுடையை ஆயின் – வராது
மனக்கலக்கம் வாழ்வில் மகிழ்வோ டமைதி
உனக்கிருக்கு மென்றே உணர்.
(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE
Ramakrishna Math, Hyderabad.)
முயன்றால் மனக்குழப்பம் முற்றா தமைதி
இயன்றவரை போராடி எய்தலாம். - முயற்சியே
எள்ளளவு மின்றி எளிதிலது வேண்டுமெனில்
கல்லறையி லேகிடைக்கும் காண்.
(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math,
Hyderabad.)