Tuesday, April 20, 2021

எங்கும் நிறைந்தவன் தான்! (வினாவிடை)

 


 

வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை

    வானில் வரைந்தவர் யார்?

மண்ணி லதன்நிழல் நீரில் விழும்படி

    மண்புறச் செய்தது யார்?

 

\கண்ணைக் கவர்கிற காட்சிகள் யாவிலும்

    காணென நிற்பவன் தான்.

எண்ணத் துறைபவன் எழில்வடி வானவன்

    எங்கும் நிறைந்தவன் தான்.

 

 

மின்னிதழ் ஒன்றின் படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.

10.9.2018.

No comments: