Saturday, November 24, 2012

இரக்கம் கொள்ள வேண்டாமா?

(சிறுவர் பாடல்)


கண்ணா மூச்சி ஆட்டத்தில்
காணும் இருட்டை அறிவாயா?
கண்ணைக் கட்டி விட்டாலே
கையால் தடவித் தேடுவையே.
கண்கள் இரண்டும் தெரியாமல்
கஷ்டப் படுவோர் நிலைதன்னை
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?

நொண்டி யடித்து ஆடுகையில்
நோகும் காலென அறிவாயே,
முண்டி யடித்து ஓடுதற்கு
முடியா தொருகால் ஊனத்தால்
நொண்டுஞ் சிறுவர் வாழ்நாளில்
நிலைத்த துயரம் அதுவன்றோ?
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?


பாரதி கலைக்கழகம்.  அழ.வள்ளியப்ப நினைவரங்கம். 29.11.2009

2 comments:

ChandarSubramanian said...

அருமை. விளையாட்டில் ஒரு படிப்பினையைச் சொல்லிய விதம் அருமை.

A Rajagopalan said...

பாராட்டுக்கு நன்றி.