Thursday, July 22, 2021

எப்படியும் ஆகத்தானே போகிறது?

எட்டரை யாகப் போகிற தெழுவெனத்
 தட்டி யெழுப்பிய தம்பிசொற் கேட்டு, 
உதறிப் போர்வை உடனே விலக்கிப் 
பதறி யெழுந்து பார்த்தனள் மணியை.
 அக்கா:
 “ ஆறே இன்னும் ஆகவே இலையே, 
தீராப் புளுகன், திருட்டுக் கழுதை” 
 தம்பி: 
”இதற்குப் போய்ஏன் இத்தனை கோபம்?
 இதுநீ கேள்நான் இயம்பிய துண்மை. 
ஆகத் தானே போகிற தென்றேன்? 
ஆகும் நிச்சயம். அறிவாய் நீயே!”

No comments: