Sunday, March 14, 2010

மீண்டு நீ வருகவே!

ஆற்றல் மிக்கு அருந்திற லறிவொடு
போற்றவே வளரும் புதுயுக விளைஞ!
இணைய தளவழி இன்னு லாவரக்
கணினி ஞானம் கைவரப் பெற்றனை.
நூதன மாயுள மின்னனு வழியில்
சாதனங் கைக்கொடு சாதனை புரிவை.
கற்றவை யாயிர மாயினு மதன்வழி
நிற்றல் மறந்தனை நின்னிலை என்சொல?
சாதி நூறின் ஒற்றுமை விட்டுப்
பேதம் மட்டுமே பேசித் திரிவை!
பாரினில் ஆணொடு பெண்ணொரு சமமெனப்
பாரதி பாடிய வரிமறந் தனையே!
பேசு வணிகப் பெருவிலை மணமும்
பேசநாக் கூசும் பெண்சிசுக் கொலையும்,
குண்டு வீசும் கொலைவெறி மதமும்
சண்டை சாவு சச்சர வென்றிவை
வேண்டா தவற்றை விலக்கி
மீண்டுநீ வருவை மேதினி யாளவே!

பாரதி கலைக்கழகம், கவியமுதம் 57ம் ஆண்டுமலர் 2008

No comments: