Wednesday, September 27, 2017

இன்றைய நாள் உன் கையில்



காலம் வருமெனக் காத்திருந்து- ஓடும்
கைகளின் ரேகையைப் பார்த்திருந்தால்
கால னழைத்திடு நாளதன்முன்- நீ
கண்டிடல் வெற்றியை சாத்தியமோ?


பின்னொரு நாளினில் நன்மையுண்டு-என்றே
பேசிடும் சோசியம் விட்டுவிடு
இன்றைய நாளுந்தன் கையிலுண்டு- நீ
இன்றே செயல்பட முந்திவிடு.


தூங்கி யெழுந்திடத் தாமதமாகிடில்- வானில்
தோன்றும் விடிவெள்ளி என்னசெய்யும்?
ஏங்கி அழுவதை விட்டுவிட்டு- நீ
எழுந்து நடந்திடு வெற்றிகிட்டும்.

No comments: