புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு. மு. தருமராசன் அவர்களின் 80 ஆண்டு நிறைவு
வாழ்த்துப்பா.
பெருமதிப்பிற் பணம்புழங்கிப்
பெருகிவளர் வங்கியெனும்
திருமகளின் உறைவிடத்துத்
தினம்சென்று பணியாற்றி
வருபொருளால் வாழ்வியற்றல்
வாய்த்திருந்தார்! செந்தமிழ்த்தாய்
அருளுடைமை காண்வகையில்
ஆற்றொழுக்காய் எழுதவல்லார்!
பணியிலுளோர் உரிமைக்காய்ப்
பலதடவை குரல்கொடுத்த
துணிவுடைய தலைவரெனத்
துலங்கியவர். பண்புமிக்கார்.
இணைபிரியாத் துணைவியொடு
இருவருமாய் மனமுவந்து
அணுகுபவற் குதவிசெயும்
அருமையான தம்பதியர்.
எதுவரையிற் கதிருளதோ
எதுவரையில் மதியுளதோ
அதுவரையில் இறையருளால்
அமையுமுடல் நலமுடனே
இதுவரையில் அடைந்தபுகழ்
இனும்மிகுந்து
வளர்வகையில்
புதுகைநகர்த் தருமராசன் -
பானுமதி வாழ்கவாழ்க!
தருமராசன்
80 நிறைவு மலரில் வெளியானது.
No comments:
Post a Comment