Sunday, March 23, 2025

எல்லோர்க்கும் ‘நல்லி’

 

 

கல்விக் கொடையும் கலைவளர்ச்சிக்  காதரவும்

நல்கு தமிழ்வழங்கு  நாவலரைச் --- சொல்லற்குச்

சொல்லிலையே. எப்போதும் சோர்வறியா  தேயுழைக்கும்

நல்லிபுகழ் நாடறியும் நன்கு.

 

 

முன்னேறக் கற்போர் முயன்று படிப்பதற்குத்

தன்னே  ரிலாத தனிநூலாய் ---  மண்ணிலுளோர்

தாழ்வின்றி வென்றுயரத் தான்வாழ்ந்து காட்டுகிறார்

வாழ்வு நடத்தும் வழி

 

 

பட்டுக்  கிவரென்று பார்போற்ற நின்றாரை

எட்டியெடை போடல் இயலாதே.  ---  பட்டறிவால்

இட்ட பெயரறியா எல்லோர்க்கும் நல்லி’யாய்க்

கிட்ட இருக்கின்றார் காண்.

 

பட்டறிவு = அனுபவத்தால் ஏற்பட்டதும், பட்டு பற்றியதுமான அறிவு.

 

அன்புப் பாலம் நவம்பர் 2024  நல்லி சிறப்பிதழில் வெளியானது.

No comments: