Friday, September 04, 2020

வீர சுதந்திரம்

 


 

பிறந்தவ ரனைவரு மென்றோ ஒருநாள்

இறந்தே யழிவ தியற்கை யாதலின்,

ஊன உடலிதற் கூறே வரினும்

பேணு முன்மையிற் பிறழ்தலை யறியார்.

மானந் துறந்து மண்ணிதி லின்பங்

காண முயன்று கயமையில் வீழ்ந்தே

ஈனத் தொண்டை யியற்றி யுயிர்தனைப்

பேணி வாழ்தல் பெரிதென வெண்ணார்.

உண்மையின் மாறா துறுதுயர் கருதா

வன்மையராகி வருபோர் நிகழ்த்தி,

ஈனத்தொண்டிற் கிடமளி யாது

மானம் பேணும் மாண்பத னாலதை

'வீர சுதந்திர' மென்று

பாரதி போற்றிப் பாடின னன்றோ?

No comments: