Sunday, February 16, 2025

ப.கே. 48 பூவின்மேல் எத்தனை பூ

 

  

    

   பின்னற் றலைப்பூவும் பட்டுச்சிற் றாடையினிற்

   கண்ணைக் கவர்மலர்கள் காண்பவையும் – மின்னலெனத்

   தாவிவிளை யாடத் தரைவந்த தேவதையிப்

   பூவின்மேல் எத்தனை பூ

 

   ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com செப். 2020

ப.கே.47. வினைசெய்ய நாளும் விரும்பு.

 

    முன்னரே எண்ணி முடிக்கும் வழியறிந்து

    பின்னர் பெறுபயனும் பார்த்திடுவாய்   இன்னும்

    முனைந்து நெறிகளுக்குள் முற்றவும் நின்றே

    வினைசெய்ய நாளும் விரும்பு.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Aug.2020