Thursday, May 11, 2017

ஒரு விருத்தச் சிலம்பு



வருங்காலன் என்றொருபொற்
  கொல்லன் வந்தே
    உரைபொய்யில் தன்குற்றம்
      மறைத்துப் போக்க,
அருந்துணையை ஆராயா
  தழித்த வேந்தன்
    அவையினிலே சிலம்புடைத்து
      நீதி கேட்ட
பெருந்துயராள் கண்ணகியின்
   வழக்கா லாங்கு
     பிழையுணர்ந்த பாண்டியனோ
       தானும் மாண்டான்.
அருங்கற்பும் ஊழ்வலியும்
   வென்று நிற்க
     அரசியலிற் பிழைக்கறமே
       கூற்றாய்க் கண்டோம்.

No comments: