Monday, August 26, 2013

மாற்றிடுவோம்

(சிறுவர் கவிதை)


வீசும் கற்றில் பெருந்தூசி
வீதியில் குப்பை கூளங்கள்
நாசியில் வீசும் துர்நாற்றம்
நகரங்களிலே இன்றுண்டு.
பாசிபடரும் வகையினிலே
பலநாள் தேங்கி நீர்நின்று
மோசம் விளைக்கும் நோய்பரப்பும்
மொய்க்கும் கொசுவின் உற்பத்தி.


ஓடும் கார்கள் சாலைகளில்
ஓசை செய்கிற பேரிரைச்சல்.
நாடு முழுதும் ஆலைகளின்
நச்சுக் கழிவின் ஆபத்து.
ஓடி ஒளிய நினையாதீர்.
உலகம் முழுதும் இப்படித்தான்.
கோடிக் கணக்கில் இருக்கின்றோம்
கொஞ்சம் முயன்று மாற்றிடுவோம்.


தினமணி.- சிறுவர் மணி. 19.12.1999.

 

No comments: