Tuesday, December 31, 2024

படித்ததும் கேட்டதும் – 46

 

தன்னைப் பிறருயர்வாய்த் தான்நினைக்க வேண்டுமென

எண்ணிக் குறைமறைப்பார் எத்தனைபேர்? – உன்னுயரம்

நீயறிவை ஊரார் நினைப்பெண்ணல் தோன்றுமன  

நோயுளமை காட்டும் நிலை.


(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)


Friday, December 13, 2024


 

   எங்குராம ராமவென்ற ஓதலோசை கேட்குமோ

      அங்குநீரு குத்தகண்க ளோடுகைகள் கூப்பியே

      தங்கியஞ்ச லிக்குமாஞ்ச நேயர்தீமை மாய்த்தமை

      தங்குநெஞ்சி னோர்கள்வாட நேருதுன்ப மில்லையே.

 

      

(ஆஞ்சநேயர் மீதான, ‘யத்ர யத்ர ரகுநாத      கீர்த்தனம்’ என்று  தொடங்கும் வடமொழி ஸ்லோகத்தின்  பொருளை உள்ளடக்கியது.)