Saturday, November 30, 2024

படித்ததும் கேட்டதும் --- 45

 

தோடகம்   

 

பொருளோ டுளசீர் இருநான் குளதாய்

   புளிமா வெனவே யுளவீ ரடியாய்

வருமோ ரெதுகை வளமோ னையதாய்

   வரைவார் புலவோர் அதுதோ டகமே.

 

முகநூல் சந்தவசந்தக் குழுமத்தில், தோடக சந்தம் பற்றிய, திரு. இலந்தை ராமசாமி அவர்களின் இழையில், அதன் இலக்கணத்தை அதே சந்தத்தில் எழுத முயன்றது.

படித்ததும் கேட்டதும் -- 44

 

வலிமை வனப்பு வளர்செல்வம் வாய்த்த

புலமையிவை நில்லாது போகும் --  உலகில்

உயிரிழந்தும் வாழ்வுதரும் ஒன்றப் புகழே

உயிரினும் மேலாம் உணர்.


ஈற்றடிக்கு எழுதியது.

Tamilauthors.com   July 2020

Sunday, November 24, 2024

படித்ததும் கேட்டதும் – 43


 சாதி மதமென்று சாற்றிப் பலநூறு

பேதங் களைக்கண்டு பேணுகிறோம் – போதும்

தலையாய தான தொருமனித நேயம்

கலையாது காத்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதியது.

 Tamilauthors.com Minnithazh. 7.1.2019



Friday, November 15, 2024

படித்ததும் கேட்டதும் – 42


 

காற்சட்டைப் பைகளிற் கைவிட்ட வாறேணி

சாற்றியதி லேறுவது சாத்தியமா? – தோற்றே

இழைப்பஞ்சி நின்றாரால் ஏதியலும்? இங்கே

உழைப்பின்றி வாரா துயர்வு.

 

ஈற்றுச்சீர் முற்றியலுகரத்திற்குக் காட்டு;

‘இனத்தியல்ப தாகும் அறிவு’ -குறள் 452 (சிற்றினம் சேராமை)


கருத்து; Vikasa Manthras , VIHE Ramakrishna Math, Hyderabad.