தோடகம்
பொருளோ டுளசீர்
இருநான் குளதாய்
புளிமா வெனவே யுளவீ ரடியாய்
வருமோ ரெதுகை
வளமோ னையதாய்
வரைவார் புலவோர் அதுதோ டகமே.
முகநூல் சந்தவசந்தக்
குழுமத்தில், தோடக சந்தம் பற்றிய, திரு. இலந்தை ராமசாமி அவர்களின் இழையில், அதன் இலக்கணத்தை
அதே சந்தத்தில் எழுத முயன்றது.